சென்னை புத்தகக்காட்சி (36வது), நந்தனத்தில்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், வாகன நிறுத்து
நிலையங்கள், உணவகங்கள், பட்டானி சுண்டல் பார்ட்டிகள் முகங்களில் காணும்
மகிழ்ச்சி, உள்ளே சில புத்தக நிலையங்களில் இல்லை!
சிறந்த படைப்பாளிகளின் பெயர்களில் வீதிகள்! 700க்கும் மேலான
கடைகள்! பிரம்மாண்டம்...!
எழுதியவர்களுக்கு (விலையில் அல்ல) இலாபத்தில் பாதி பங்குப் பணமாவது கிடைப்பது உறுதி என்றால், ஏழை எழுத்தாளர்களே
தமிழ்ச்சாதியில் இல்லை என்று கொட்டலாம் முரசு!அப்படி இருக்கிறது நூலகளின் விலை!
எல்லாமே அப்படித்தான்யா.. என்று நீங்க சொல்லுவது
எனக்குக் கேட்கிறது. ஆனால் இவற்றை எல்லாம்
சொல்லவும் சிந்திக்கவும் செய்திடும் நூலகளுக்கே இந்த
நிலை என்பதுதான் வேதனை!
அடுத்த புத்தகக் காட்சியிலாவது, கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு, சிற்றிதழ் என்ற
வகைப்பாட்டில் ஒரு வீதி முழுவதும் இலக்கிய வகை அடிப்படையில் கடைகள் வையுங்கள்.
No comments:
Post a Comment