Wednesday, December 26, 2012
Wednesday, December 19, 2012
அரசு சார்ந்தவரென்றால் அதிகமாகிவிடுமா...தகுதி?
தவறுகள் தட்டிக் கேட்கப்பட வேண்டும் - என்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின். பாரதியாரின் பிறந்தநாள் உரையினைப் படித்த உற்சாகத்தில், நடுப்பக்கக் கட்டுரை (12-12-12) ”துணைவேந்தரைத் தெரிவு செய்ய...” - முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களது கட்டுரை படித்தேன். விருந்துணவு படைத்த இலையில் விடம் வைத்தது போல் உள்ளது கண்டு இக்கடிதம் எழுதுகிறேன்.
பல்கலைக்கழகம் என்றால் என்ன? துணைவேந்தர் பொறுப்பு எத்தகையது? துணைவேந்தரைத் தேர்வு செய்வது எப்படி? என்ற வினாக்களைப் பின்னிறுத்தி, விடையளித்துள்ளார் கட்டுரை ஆசிரியர். இந்த செவியறிவுறூஉ... உரையில், ’தேர்ந்தெடுப்பது’ ’ஆய்ந்தெடுப்பது’ முதலான சொல்லாடல்களையும் அவற்றையே விளக்க உத்திகளாகவும் கையாண்டவர் தம் சொற்களில் அவற்றைப் புறக்கணித்தமை வருத்தமளிக்கிறது. செல்வாக்கிலும் சிபாரிசுகளிலும் சிம்மாசனம் ஏறிவிடும் கல்விமான்கள் காசு சேர்த்து, காலம் கழித்துச் செல்லும் பொழுதுபோக்காக துணைவேந்தர் பதவிகள் போய்விடக்கூடாது என்று மன்னருக்குப் புலவர் அறிவுறுத்துவது சரிதான், ஆனால், சுயநிதிக்கல்லூரி ஆசிரியர்களை (பேராசிரியர்கள் என்று கூடக் கட்டுரையில் குறிப்பிடத் தயங்கி) துணைவேந்தராக்கினால், ”அப்பதவி கொச்சைப்படுத்தப் படும்” என்றும் ”எதிர்காலம் இருண்டு போகும்” என்றும் அரசு தன் பொறுப்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களுக்குத் தான் அப்பதவி தகுதிவாய்ந்தது என வாதிடுவதும். வண்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே நிதி நெருக்கடிகளில் மூச்சுத்திணறும் பல்கலைக்கழகங்களுக்கு, தங்களின் மிகுதியான துறைகளின் இணைப்புக் கட்டணங்களாலும், அதிகமான மாணவர் சேர்க்கைக் கட்டணங்களாலும், தேர்வு மற்றும் இதரக் கட்டணங்களாலும் சுயநிதிக்கல்லூரிகள் தான் அவ்வப்போது பல்கலைக்கழகத்திற்கு சுவாசக்காற்றளிக்கின்றன. பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களை உதாரணத்திற்கு, அது ஒரு என்.எஸ்.எஸ். திட்டமாக இருந்தாலும், சிரமேற்கொண்டு செவ்வனே செய்து முடிப்பது சுயநிதிக்கல்லூரிகள்தான். தமிழகத்தில் அரசு மற்றும் அரசுதவி பெறும் கல்லூரிகளை விட பன் மடங்கு புதிய பட்டவகுப்புகள், புதிய வசதிகள், போதுமான பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள், வளாக வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இன்று அரசு கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி வாய்ப்புகளைப் பெறும் பலரும் பணியாற்றிய அனுபவமும் தகுதியையும் வளர்த்துக் கொண்ட இடம் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தான். இதற்கு கட்டுரையாசிரியரும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் 200 க்கு மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 65 கலை அறிவியல் கல்லூரிகளும் சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. குறைவான ஊதியத்தில் அதிகமான நேரம் பணியாற்றி, அறிவும் திறனும் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோதும், சுயநிதிக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிறப்பும் பொறுப்பும் நிறைந்த மேலாண்மைத் திறனற்றவர்கள் என்று கட்டுரையாளர் கருதுவது நியாயமற்றது. கட்டுரையாளர் பெருமையாகக் கருதும் அரசு சார்ந்த அப்பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதும் சுயநிதி நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்ந்து கொள்வதை எவ்வாறு கருதுகிறார்? அங்கே அவர்களால் முடியாத பலவற்றை இங்கே சாதிக்கும் வாய்ப்புகளைப் பெறுவது எப்படி?. ஒரு அரசாங்கமோ.. பல்கலைக்கழகமோ செய்ய முடியாத பல ஆய்வுகளை, கருத்தரங்குகளை, மாநாடுகளை, சமூகப் பயன்பாடுகளை சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் சாதித்துக் காட்டுவதை, அன்றாடம் செய்தி ஊடகங்களை அக்கறையுடன் பார்ப்பவர்கள் அறிவார்கள். போகிறபோக்கில் சுயநிதிக் கல்வியாளர்களை இழிவுபடுத்தும் அரசியல் நுழைவு சரியானதல்ல.
கட்டுரையாளருக்கு எதிர்வினையாக அரசு சார்ந்த கல்வி நிறுவன மாணவர்களையும் பேராசிரியர்களையும் குறைத்து மதிப்பிடவில்லை. கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து வந்துவிட்ட சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் இன்று காலத்தின் கட்டாயம், நல்ல மனிதர்கள் நல்ல நோக்கங்களுடன் கல்விப் பணியைத் தொடங்கி வெற்றி கண்டு வருகிறார்கள். மாறாக அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் கவலைகிடமாகக் கிடக்கின்றன. கட்டுரையாசிரியர் இருபதாண்டுகளுக்குப் பின் பிறந்திருந்தால் ஒரு சுயநிதி கல்வி நிறுவனத்தில் படித்திருக்கும் வாய்ப்புக் நேர்ந்திருக்கும். அவருக்கும் அவரது துணைவியாருக்கும் சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததைப் போல. பல்கலைக்கழகத்தில் கல்விக் குழுவில், ஆட்சி மன்றக்குழுவில், ஆட்சிக்குழுவில், பாடத்திட்டக்குழுவில், தேர்வுப்பணியில் மிகுதியானப் பங்கேற்பில், பயிற்சியில், செயலில், அனுபவத்தில் திறன் வெளிப்படுத்தும் சுயநிதிக் கல்வி நிறுவனத்தார்களால் ஏன் துணைவேந்தர் பொறுப்பிலும் தகுதி பெறமுடியாது?
மூன்று பட்ட வகுப்புகளுடன் தொடங்கும் சுயநிதிக்கல்லூரியை முதுகலைகள் உட்பட முப்பது துறைகளுடன் முன்னேற்றி, ஆய்வுத்துறைகளுடன் அக்கல்லூரியை ஒரு பல்கலைக்கழக அளவிற்கு உயர்த்தி அப்பகுதி மாணவர்கள் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கும் முன்னோடிகளாகும் சுயநிதிக் கல்வி நிறுவனக் கல்வியாளர்கள் திறமையும் பொறுப்பும் அற்றவர்களா? கட்டுரையாளர் குறிப்பிடும் தகுதியாளர்கள் பொறுப்பு வகித்த 160 ஆண்டு கால வரலாற்றுப் பல்கலைக்கழகம் பழுதின்றி, குறைபாடுகளற்ற புகழொடுதான் திகழ்கின்றதா? கட்டுரையாளர் குறிப்பிடும் தகுதியாளர்கள் வருங்காலத்தில் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இருந்தும் வருபவர்களாக இருப்பதை மறுக்கமுடியுமா? தடுக்க நினைப்பது தவறாகாதா?
-பேரா.சு.தளபதி,
தமிழ்த்துறைத்தலைவர்,
எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி. காட்டாங்குளத்தூர்.
பல்கலைக்கழகம் என்றால் என்ன? துணைவேந்தர் பொறுப்பு எத்தகையது? துணைவேந்தரைத் தேர்வு செய்வது எப்படி? என்ற வினாக்களைப் பின்னிறுத்தி, விடையளித்துள்ளார் கட்டுரை ஆசிரியர். இந்த செவியறிவுறூஉ... உரையில், ’தேர்ந்தெடுப்பது’ ’ஆய்ந்தெடுப்பது’ முதலான சொல்லாடல்களையும் அவற்றையே விளக்க உத்திகளாகவும் கையாண்டவர் தம் சொற்களில் அவற்றைப் புறக்கணித்தமை வருத்தமளிக்கிறது. செல்வாக்கிலும் சிபாரிசுகளிலும் சிம்மாசனம் ஏறிவிடும் கல்விமான்கள் காசு சேர்த்து, காலம் கழித்துச் செல்லும் பொழுதுபோக்காக துணைவேந்தர் பதவிகள் போய்விடக்கூடாது என்று மன்னருக்குப் புலவர் அறிவுறுத்துவது சரிதான், ஆனால், சுயநிதிக்கல்லூரி ஆசிரியர்களை (பேராசிரியர்கள் என்று கூடக் கட்டுரையில் குறிப்பிடத் தயங்கி) துணைவேந்தராக்கினால், ”அப்பதவி கொச்சைப்படுத்தப் படும்” என்றும் ”எதிர்காலம் இருண்டு போகும்” என்றும் அரசு தன் பொறுப்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களுக்குத் தான் அப்பதவி தகுதிவாய்ந்தது என வாதிடுவதும். வண்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே நிதி நெருக்கடிகளில் மூச்சுத்திணறும் பல்கலைக்கழகங்களுக்கு, தங்களின் மிகுதியான துறைகளின் இணைப்புக் கட்டணங்களாலும், அதிகமான மாணவர் சேர்க்கைக் கட்டணங்களாலும், தேர்வு மற்றும் இதரக் கட்டணங்களாலும் சுயநிதிக்கல்லூரிகள் தான் அவ்வப்போது பல்கலைக்கழகத்திற்கு சுவாசக்காற்றளிக்கின்றன. பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களை உதாரணத்திற்கு, அது ஒரு என்.எஸ்.எஸ். திட்டமாக இருந்தாலும், சிரமேற்கொண்டு செவ்வனே செய்து முடிப்பது சுயநிதிக்கல்லூரிகள்தான். தமிழகத்தில் அரசு மற்றும் அரசுதவி பெறும் கல்லூரிகளை விட பன் மடங்கு புதிய பட்டவகுப்புகள், புதிய வசதிகள், போதுமான பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள், வளாக வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இன்று அரசு கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி வாய்ப்புகளைப் பெறும் பலரும் பணியாற்றிய அனுபவமும் தகுதியையும் வளர்த்துக் கொண்ட இடம் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தான். இதற்கு கட்டுரையாசிரியரும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் 200 க்கு மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 65 கலை அறிவியல் கல்லூரிகளும் சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. குறைவான ஊதியத்தில் அதிகமான நேரம் பணியாற்றி, அறிவும் திறனும் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோதும், சுயநிதிக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிறப்பும் பொறுப்பும் நிறைந்த மேலாண்மைத் திறனற்றவர்கள் என்று கட்டுரையாளர் கருதுவது நியாயமற்றது. கட்டுரையாளர் பெருமையாகக் கருதும் அரசு சார்ந்த அப்பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதும் சுயநிதி நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்ந்து கொள்வதை எவ்வாறு கருதுகிறார்? அங்கே அவர்களால் முடியாத பலவற்றை இங்கே சாதிக்கும் வாய்ப்புகளைப் பெறுவது எப்படி?. ஒரு அரசாங்கமோ.. பல்கலைக்கழகமோ செய்ய முடியாத பல ஆய்வுகளை, கருத்தரங்குகளை, மாநாடுகளை, சமூகப் பயன்பாடுகளை சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் சாதித்துக் காட்டுவதை, அன்றாடம் செய்தி ஊடகங்களை அக்கறையுடன் பார்ப்பவர்கள் அறிவார்கள். போகிறபோக்கில் சுயநிதிக் கல்வியாளர்களை இழிவுபடுத்தும் அரசியல் நுழைவு சரியானதல்ல.
கட்டுரையாளருக்கு எதிர்வினையாக அரசு சார்ந்த கல்வி நிறுவன மாணவர்களையும் பேராசிரியர்களையும் குறைத்து மதிப்பிடவில்லை. கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து வந்துவிட்ட சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் இன்று காலத்தின் கட்டாயம், நல்ல மனிதர்கள் நல்ல நோக்கங்களுடன் கல்விப் பணியைத் தொடங்கி வெற்றி கண்டு வருகிறார்கள். மாறாக அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் கவலைகிடமாகக் கிடக்கின்றன. கட்டுரையாசிரியர் இருபதாண்டுகளுக்குப் பின் பிறந்திருந்தால் ஒரு சுயநிதி கல்வி நிறுவனத்தில் படித்திருக்கும் வாய்ப்புக் நேர்ந்திருக்கும். அவருக்கும் அவரது துணைவியாருக்கும் சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததைப் போல. பல்கலைக்கழகத்தில் கல்விக் குழுவில், ஆட்சி மன்றக்குழுவில், ஆட்சிக்குழுவில், பாடத்திட்டக்குழுவில், தேர்வுப்பணியில் மிகுதியானப் பங்கேற்பில், பயிற்சியில், செயலில், அனுபவத்தில் திறன் வெளிப்படுத்தும் சுயநிதிக் கல்வி நிறுவனத்தார்களால் ஏன் துணைவேந்தர் பொறுப்பிலும் தகுதி பெறமுடியாது?
மூன்று பட்ட வகுப்புகளுடன் தொடங்கும் சுயநிதிக்கல்லூரியை முதுகலைகள் உட்பட முப்பது துறைகளுடன் முன்னேற்றி, ஆய்வுத்துறைகளுடன் அக்கல்லூரியை ஒரு பல்கலைக்கழக அளவிற்கு உயர்த்தி அப்பகுதி மாணவர்கள் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கும் முன்னோடிகளாகும் சுயநிதிக் கல்வி நிறுவனக் கல்வியாளர்கள் திறமையும் பொறுப்பும் அற்றவர்களா? கட்டுரையாளர் குறிப்பிடும் தகுதியாளர்கள் பொறுப்பு வகித்த 160 ஆண்டு கால வரலாற்றுப் பல்கலைக்கழகம் பழுதின்றி, குறைபாடுகளற்ற புகழொடுதான் திகழ்கின்றதா? கட்டுரையாளர் குறிப்பிடும் தகுதியாளர்கள் வருங்காலத்தில் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இருந்தும் வருபவர்களாக இருப்பதை மறுக்கமுடியுமா? தடுக்க நினைப்பது தவறாகாதா?
-பேரா.சு.தளபதி,
தமிழ்த்துறைத்தலைவர்,
எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி. காட்டாங்குளத்தூர்.
Subscribe to:
Posts (Atom)

