Sunday, December 18, 2011

பிறந்த மண், பெற்ற தாய், பேசும் மொழி, இவற்றினுக்குப் பின்தான் வேறு எதுவும். பின் ஏன் மத்திய அமைச்சராக இருக்கும் தமிழன் சுயநலம் கருதி தான் கூறிய கருத்துக்கு வாபஸ் வாங்க வேண்டும்?

         பிறந்த மண், பெற்ற தாய், பேசும் மொழி, இவற்றினுக்குப் பின்தான் வேறு எதுவும். பின் ஏன் மத்திய அமைச்சராக இருக்கும் தமிழன் சுயநலம் கருதி தான் கூறிய கருத்துக்கு வாபஸ் வாங்க வேண்டும்?
        ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு, அறிவியல் அறிஞர்கள் கூறும் நியாயம், பாதிக்கப்படும் மக்கள் வேண்டுகோள், மனிதநேயம் ஆகியவற்றை மீறி, அந்த நாட்டுக்கு கட்டுப்பட்ட , ஒரு மாநில அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் மத்திய அமைச்சர்,  தன் சுயநலத்துக்காக ஏன் தன் கருத்தை (திலுருந்து) பின் வாங்க வேண்டியது?.  தன்சுயநலம் மட்டும் தான் முக்கியமா? தன் கட்சி தான் முக்கியமா? தன் பதவிதான் முக்கியமா? வரலாறு என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. எத்தனைக் காலம் வாழ்ந்தோம் என்பதல்ல வரலாறு? எப்படி வாழ்ந்தோம் என்பது தான் வரலாறு! 
       அணை உடைவதோ... உடைப்பதோ.. அல்ல நிகழ்வு! அதனால் ஆக்கம் என்ன? அழிவு என்ன ? என்பதுதான் முக்கியம். எல்லைகளை எல்லாம் தொல்லைகளாக்கி விட்டு, உள்ளே மட்டும் எப்படி பாதுகாப்பாய் வாழ்வது? தமிழக அரசியல் வாதிகளே!  ஒன்று படுங்கள்! உணர்வால், மொழியால், இனத்தால் !!! உலகத்திற்கு மானுடத்தையும் மானுட வாழ்வையும் அறிமுகப்படுத்தியவர்கள் நாம். இனத்தின் அடிப்படையில் வாழ்ந்தாலும் உலக அளவிலேயே எப்போதும் சிந்தித்தோம். வந்தாரை வாழ வைப்பதும், மனிதநேயத்தால் இரக்க உணர்வுடன் வாழ்வதும்  தவறென்றால்,  தமிழினம் ஒன்று படட்டும்!  
    வேற்றுமையில் ஒற்றுமையை நாம் உணர்த்துவோம்.  ஆது கூடங்குளமாகட்டும்! முல்லைப் பெரியாறாகட்டும், ஊழல் ஒழிப்பாக இருக்கட்டும், ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்.!

No comments:

Post a Comment