அன்பு தோழமையே! வணக்கம்.
உங்களோடு இந்த வலைப்பூ வழியாகத் தொடர்பு கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பே 'பதம் என்ற இந்தச் சிந்தனைக்களம் பேராசிரியர்களான நானும், கவிஞர் பச்சியப்பன், முனைவர் பா.ரவிக்குமார் மற்றும் எங்கள் மாணவர்கள் சிலரும் என் வீட்டுமாடியில் ஒரு மாலைப்பொழுது கலந்துரையாடி, ஒரு சிறிய இலக்கிய அமைப்பாக உருவாக்கினோம். மாதம் ஒரு முறை கூடி, கலை-இலக்கியம், சமூகம், திரைப்படம் குறித்து கலந்துரையாடி வந்தோம். நண்பர்கள் வீடு, கல்லூரிவளாகம் என, பிடித்த இடங்களில் சில மாதங்கள் கூடினோம். பின்பு சூழலின் விளைவாகத் தொடர்ந்தியங்க இயலாமற் போனது. பிற்காலத்தில் இப்பெயரில் இயங்க எண்ணம். தருணம் தற்போது இந்த வலைப்பூ.
தமிழ் மொழியும். தமிழுலகமும் தொன்மையும் பெருமையும் மிக்கவை. எப்போதும் தம்மை முழுவதும் இழந்து விடாமல் புதுப்பித்துக் கொள்ளும் நுட்பம் நிறைந்தவை. உலகின் பொது நிலையில், உள்ள அல்லது தோன்றும் எல்லா கலைகள் மற்றும் இலக்கியங்கள் சார்ந்த விளைவுகள், தமிழிலும் தமிழுலகிலும் தவிர்க்க முடியாமல் போகும் சூழல்கள் நிலவுகின்றன. இக்கால கட்டத்தில் எம்மாலும் ஏதேனும் பங்களிப்பைச் செய்வதில் ஒரு மகிழ்வு.அடுத்தத்தலைமுறைகளுக்கு ஏதேனும் பதிவுகளை இட்டுச் செல்வோம். எடுத்துக் கொள்வோரை அல்லது ஏற்றுக்கொள்வோரை வரவேற்கிறேன். வாருங்கள்! இணைவோம் இனிதாக! நட்பாக அழைக்கிறேன். நன்றி! உங்கள் அன்பு,
- தளபதி
Any story, poet .pls post me .l am waiting .
ReplyDeleteஅன்பு நண்பருக்கு வணக்கம். என்ன வகையான கதை வேண்டும்
ReplyDelete